ஒரே நாளில் இலங்கையில் அடுத்தடுத்து பொருட்களின் விலைகள் அதிகரிப்பு குறித்து தகவல் வெளியாகி வரும் நிலையில் முச்சக்கரவண்டி பயணிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையிலான செய்தியொன்று வெளியாகியுள்ளது.
- Advertisement -
அதன்படி முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்கும் வகையிலான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவிக்கையில்,
- Advertisement -
முதல் கிலோமீட்டருக்கு 80 ரூபாவும், இரண்டாவது கிலோமீட்டருக்கு 50 ரூபாவும் முச்சக்கரவண்டி கட்டணமாக அறவிடப்படுவது நியாயமானது என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணிகளை கருத்தில் கொண்டு பார்க்கும் போது இது நியாயமான விலை அதிகரிப்பாகும் என குறிப்பிட்டுள்ளார்.