நாட்டில் கோவிட் தொற்று அதிகரித்து வரும் கால கட்டத்தில், நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காகவும் சுய பாதுகாப்பிற்காகவும் பாதுகாப்பு கவசங்கள் கட்டாய தேவையாக மாறி விட்டன.
- Advertisement -
இவ்வாறான கால கட்டத்தில், செலான் வங்கியின் மானிப்பாய் கிளையினால் மானிப்பாயை சேர்ந்த முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கு கோவிட் பாதுகாப்பு கவசம் வழங்கும் நிகழ்வு நேற்று (08.03.2022) சிறப்பாக நடைபெற்றது.
- Advertisement -
75 முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தை சேர்ந்த பயனாளிகள் இதனை பெற்று கொண்டனர். இந் நிகழ்வில் செலான் வங்கியின் வட பிராந்திய முகாமையாளர் மற்றும் மானிப்பாய் கிளை ஊழியர்களோடு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் சுகாதார பிரிவினர் கலந்து கொண்டனர்.