வெள்ளவத்தையில் இருந்து யாழ்ப்பாணம் வரை புதிய புகையிரத சேவையை ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி வெள்ளிக்கிழமையில் வெள்ளவத்தையில் இருந்து இரவு 10.00 மணிக்கு யாழ்ப்பாணத்துக்குப் புறப்படும்.
- Advertisement -
அத்துடன் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமையில் இரவு 10.00 புறப்பட்டு அதிகாலை 5 மணிக்குக் கோட்டை புகையிரத நிலையத்தைச் சென்றடையும் .
- Advertisement -
இந்த புகையிரதத்தில் 530 பயணிகள் பயணிக்க முடியும் என்பதுடன் விரைவில் இந்த இரவு நேர புகையிரத சேவை ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.