யாழில் போதை மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சமபவத்தில் தெல்லிப்பழை, கட்டுவன் மேற்கைச் சேர்ந்த 19 வயதுடைய கட்டடத் தொழிலாளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
- Advertisement -
நேற்று மாலை போதை மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்ட அவர், நேற்றிரவு உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.
- Advertisement -
மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரிடமிருந்து போதை மாத்திரைகளை இருவர் வாங்கியுள்ளனர்.
தண்ணீரில் நனைந்த போதை மாத்திரைகள் பல ஒன்றோடு ஒன்று ஒட்டியவாறு காணப்பட்டதாகவும், அவற்றை ஒரேயடியாக இளைஞன் உட்கொண்டதால் உயிரிழந்ததாகவும் விசாரணைகளில் கண்டரியப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.