தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். தற்பொழுது நடைபெற்று வரும் உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளையும் விரைவில் வெளியிட்டு, பல்கலைக்கழகத்திற்காக காத்திருக்கும் நாட்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -
கொடகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் நேற்று பங்குபற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
- Advertisement -
உணவு உற்பத்தியில் தன்னிறைவான நாடாக இலங்கையை மாற்றுவதற்கு ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றையேனும் உற்பத்தி செய்ய முடிந்தால் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதனை ஓரளவு குறைத்துக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.