தங்காலை, மஹாவெல பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு இன்று பிற்பகல் டீசலை ஏற்றிய பௌசர் வந்த போது, அங்கு காத்திருந்த வாடிக்கையாளர்கள் அமோக வரவேற்பை அளித்துள்ளனர்.
- Advertisement -
பட்டாசு கொளுத்தியும், கைதட்டியும், ஆரவாரம் செய்தும் மக்கள் டீசல் பவுசரை வரவேற்றுள்ளனர். பெட்ரோல் நிலையத்தில் டீசல் பெறுவதற்காக சுமார் 12 மணி நேரம் வரிசையில் நின்றதாக சிலர் தெரிவித்துள்ளனர்.