நேற்றாஇயதினம் யாழ்.கொக்குவில் புகைரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தில் மோதி 22 வயதான இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
- Advertisement -
இந்த நிலையில் உயிரிழந்த ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவலகள் வெளியாகியுள்ளது. யாழ்.காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு சென்று குளிரூட்டப்பட்ட புகையிரதம் மீது மோதியே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
- Advertisement -
சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் ஜெயந்தி என்ற இளம்பெண்ணே உயிரிழந்துள்ளார். அதேவேளை சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் தந்தை ராஜ்குமார் , காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதே வேளை யுவதி தற்கொலை செய்யும் எண்ணத்துடன் ரயிலில் பாய முற்பட்ட போது தந்தை கத்தியபடி தடுக்க முற்பட்டேகாயமடைந்ததாகவும் நேரில் பார்த்த சிலர் கூறியதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.