சதுரங்க விளையாட்டு போட்டியில் உலகின் முதல் இடத்தில் இருக்கும் மேக்னஸ் கார்ல்சனை (Magnus Carlsen) வீழ்த்தி தமிழ் சிறுவனொருவன் சாதனை படைத்துள்ளார்.
- Advertisement -
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உலகின் முன்னணி வீரர்கள் 16 பேர் பங்கேற்கும் Airthings Masters சதுரங்க விளையாட்டு போட்டி இணைய வழியாக நடைபெற்றுள்ளது.
- Advertisement -
இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா எனும் 16 வயதுடைய சிறுவன் 8 ஆவது சுற்றில் உலகின் முதல் இடத்தில் இருக்கும் மேக்னஸ் கார்ல்சனை (Magnus Carlsen) வீழ்த்தி வெற்றிப்பெற்றுள்ளார்.
குறித்த போட்டித் தொடரில் அவர் பதிவு செய்த இரண்டாவது வெற்றியாகும். மேக்னஸ் கார்ல்சன் உலக சாம்பியனும் முதல் நிலை வீரருமாவார். வெறும் 39 நகர்வுகளில் அவர் வெற்றிபெற்று கார்ல்சனுக்கு அதிர்ச்சியளித்து பிரக்ஞானந்தா 8 புள்ளிகளுடன் 12 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
தமிழ் நாட்டின் சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா செஸ் உலக சாம்பியனும் முதல் நிலை வீரருமான நோர்வேயின் மேக்னஸ் சார்ல்சனை வெற்றிகொண்டதற்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஒட்டுமொத்த உலகையே திகைப்பில் ஆழ்த்தியுள்ள பிரக்ஞானந்தாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டென்டுல்கரும்,திரைப் பிரபலங்களும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.