மலை ஏறுகையில், மலை இடுக்கில் 46 மணித்தியாலங்கள் சிக்கி தவித்த இளைஞர் மீட்படையினரால் பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் இந்தியாவின் கேரளாவில் இடம்பெற்றுள்ளது. நண்பர்களுடன் மலையேற்றத்திற்கு சென்றபோதே குறித்த இளைஞர் இவ்வாறு மலையிடுக்கில் சிக்கிக்கொண்டார்.
- Advertisement -
இதனையடுத்து 46 மணித்தியாலங்களின் பின்னர் அவர் மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
- Advertisement -
கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்தவர் பாபு (28). இவரும் வேறு 3 நண்பர்களும் நேற்று முன்தினம் மலம்புழையில் காட்டுப்பகுதிக்குள் மலையேற சென்றனர். மதியம் பாபு மலையில் இருந்து இறங்கியபோது, செங்குத்தான பாறை இடுக்குகளுக்குள் தவறி விழுந்தார்.
அவருடன் சென்றவர்கள் அவரை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை. இதனையடுத்து அவர்கள் மலையில் இருந்து இறங்கி மலம்புழை வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்த நிலையில் , மலை ஏற்ற வீரர்களும், விபத்து பேரிடர் மீட்பு படையினரும் விரைந்து சென்றனர். எனினும் பாபு சிக்கியுள்ள இடத்தை அவர்களால் அடையாளம் காணமுடியவில்லை.
அதை தொடர்ந்து ஹெலிகொப்டர் மூலம் தேடும் பணி தொடங்கியது. நீண்ட நேரத்திற்கு பின் வாலிபர் பாபு சிக்கியுள்ள இடம் கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து அவரை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்ட நிலையில், மலை இடுக்கில் சிக்கிய இளைஞரை ஹெலிகொப்டர் மூலம் கடற்படையினர் மீட்க மேற்கொண்ட போது முயற்சி தோல்வியில் முடிந்ததால் இந்திய இராணுவத்தின் உதவியை கேரள அரசு நாடியது.
இதனையடுத்து தகை வெலிங்டன், பெங்களூரில் இருந்து வந்த மலையேற்ற பயிற்சி பெற்ற இராணுவ வீரர்கள், பாபுவிற்கு பாதுகாப்பு பெல்ட் அணிவித்து 400 மீட்டர் உயரத்துக்கு தூக்கி காப்பாற்றியுள்ளனர். சம்பவத்தில் குறித்த இளைஞருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் இச்சமபவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..