நாட்டில் சமீப காலமாக எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் இன்று மூன்று இடங்களில் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
- Advertisement -
வவுனியா கூமாங்குளம் இரண்டாம் குறுக்குத் தெரு பகுதியில் சமைத்துக் கொண்டிருந்த போது எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -
உணவு தயாரித்துக் கொண்டிருந்த போது இன்று (06.02) காலை திடீரென எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு சொந்தமான 12.5 கிலோ எடை கொண்ட சிலிண்டர் பயன்படுத்தப்பட்டது.
உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதனையடுத்து வீட்டார் எரிவாயு கொள்கலனை பாதுகாப்பாக அகற்றி மேலதிக அனர்த்தம் ஏற்படுவதை தடுத்துள்ளனர்.
அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் தடவியல் பொலிஸாரின் உதவியுடன் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட மட்டிக்கழி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று காலை எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்த சம்பவம் பதிவாகியுள்ளது. மட்டிக்கழி பிரதான வீதியில் உள்ள வீடு ஒன்றிலேயே இந்த வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது.
இன்று காலை உணவுக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்போது அடுப்பு வெடித்து சிதறியுள்ளதாக குறித்த வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை பகுதியிலும் இன்றைய தினம் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.