பிரித்தானியாவில் இருக்கும் இலங்கை தூதுவராலயத்தின் முன் நடைபெற்ற கரி நாள் போராட்டத்தின் போது இலங்கையின் அடையாளமான சிங்கக் கொடியை நடுவீதியில் வைத்து எரித்துள்ளனர்.
- Advertisement -
இதேவேளை தூதரகத்தின் மாடியில் கட்டப்பட்டிருந்த இலங்கையின் தேசியக்கொடிக்கு சமாந்தரமான உயரத்தில் நீண்ட கோல் ஒன்றில் தமிழர் தாயகத்தின் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டிருந்ததையும் இந்தப்போராட்டத்தில் அவதானிக்க முடிந்தது.
- Advertisement -
மேலும் இந்த போராட்டம் பிரித்தானியாவின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
பிரித்தானியாவில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இலங்கையின் சுதந்திர நாளுக்கெதிரான பதாதைகளையும் தாங்கியபடி கண்டனக் கொட்டொலிகளை எழுப்பியிருந்தனர்.