ஹொரணை, மல் பெரிகம பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக வீடொன்றில் வைத்து மனைவியொருவர் தனது கணவரை படுகொலை செய்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- Advertisement -
படுக்கையில் வைத்தே கணவனின் கழுத்தை சட்டையால் நெறித்து கொலை செய்துள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -
ஒரு பிள்ளையின் தந்தையான 30 வயதான வசந்த குமார என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் முன்னாள் இராணுவ வீரர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறினை அடுத்து இரவு உறங்கச் சென்ற வேளையில் மனைவி இந்தக் கொலையைச் செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரின் மனைவி ஹொரணை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.