யாழ்.கொக்குவில் ஐயனார் கோவிலடியில் கஞ்சாவுடன் ஒருவரை இராணுவத்தினர் கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- Advertisement -
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் சோதனையிட்டபோது, அங்கு 600 கிராம் கஞ்சாவை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.
- Advertisement -
இதேவேளை, குறித்த கஞ்சாவை வைத்திருந்ததாக அந்த வீட்டில் இருந்த நபர் கைது செய்யப்பட்டு மதுவரி திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்