யாழ்.வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இன்றைய தினம் நகையும் பணமும் திருட்டு போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
- Advertisement -
இந்த சம்பவம் இன்று (01-02-2022) செவ்வாய்க்கிழமை மதியம் வட்டுக்கோட்டை – சந்கரத்தை – ஓடக்கரை வீதியில் இடம்பெற்றுள்ளது.
- Advertisement -
மேலும் இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த வீட்டின் உரிமையாளர் கிளிநொச்சி பனை தென்னை அபிவிருத்தி சங்கத்தில் கடமையாற்றி வருகின்ற நிலையில் இன்று அவர் கடமைக்கு சென்றிருந்தார்.
இதேவேளை, அவரது மனைவி, மகளை பாடசாலையில் இருந்து தனது தாயார் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டு இன்று பிற்பகல் 4 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்நிலையில், வீட்டின் கண்ணாடி உடைக்கப்பட்டு, ஒரு பவுண் நகையும், பத்தாயிரம் ரூபா பணமும் திருடப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. பொலிஸார் திருடனை பிடிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.