கல்யாண நாளன்று விருந்தினர்கள்முன் தன்னை அவமானபடுத்தியதாகக் கணவரை விவாகரத்து செய்யவுள்ளார் ஒரு பெண்.தனது முகத்தில் கேக்கைப் பூசவேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்தார் மணப்பெண்.
- Advertisement -
ஆனால் கல்யாண நாளன்று அவருக்கு நேர்ந்த அதிர்ச்சி கொஞ்சநஞ்சமல்ல. பெண்ணின் தலையைப் பிடித்துக் கேக்கில் தள்ளிவிட்டார் கணவர். சாப்பிடுவதற்குத் தனியாக சிறு கேக்குகளை வைத்திருந்த அவர் திட்டமிட்டு அவ்வாறு செய்ததாக மணப்பெண் கூறினார்.
- Advertisement -
சம்பவத்தால் பீதியடைந்த பெண் சற்றும் எதிர்பாராத விதமாக அடுத்த நாளே தனது கணவரிடம் விவாகரத்து கோரினார். கணவருடன் சேர்ந்து வாழுமாறு உறவினர்கள் மணப்பெண்ணிடம் கெஞ்சிப் பார்த்தனர்.
இணையத்தளத்தில் பலர் மணப்பெண்ணுக்கு ஆதரவு காட்டி வருகின்றனர். கிறிஸ்துமஸுக்குமுன் கல்யாணம் செய்தனர் இந்தத் தம்பதி. இம்மாத (ஜனவரி 2022) இறுதிக்குள் விவாகரத்துப் பெற விரும்புகிறார் மணப்பெண்.