2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ள 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு பாடசாலை அதிபர்கள், பௌத்த குருகுல பள்ளி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைகளின் ஊழியர்களுக்கு வழங்கப்படமாட்டாது எனக் கூறப்படுகிறது.
- Advertisement -
இது குறித்து அறிவித்து நேற்றைய தினம் அம்பாறை வலய கல்வி அலுவலகம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
- Advertisement -
கடந்த 18 ஆம் திகதி கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் நடைபெற்ற வலய கல்வி கணக்காய்வாளர்களின் கூட்டத்தில் கொடுப்பனவை இடைநிறுத்தும் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அம்பாறை வலய கல்வி அலுவலகத்தின் கணக்காய்வாளர் எல்.ரி. சலித்தீன் ZEO/AAC/CC/01 கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
அதிபர்கள், பௌத்த குருகுல பள்ளி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை ஊழியர்களுக்கு வழங்கும் சம்பள துண்டுச்சீட்டில் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அது சம்பளத்தில் கிடைக்காது எனவும் கடிதத்தில் கணக்காய்வாளர் கூறியுள்ளார்.