மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவரின் சடலம் சவூதி அரேபியா ஜித்தாவில் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
- Advertisement -
சடலமாக மீட்கப்பட்டவர் காத்தான்குடியைச் சேர்ந்த முகம்மட் மபாஸ் (31) என கூறப்படுகின்றது. ஜித்தாவிலுள்ள வீடு ஒன்றில் சாரதியாக தொழில் புரிந்து வந்த நிலையில் குறித்த நபர் அவர் தங்கியிருந்த அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
- Advertisement -
உயிரிழந்தவர் காத்தான்குடியை பிறப்பிடமாகவும் பூநொச்சிமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
இரண்டு வருட காலத்தை நிறைவு செய்த பின்னர் அடுத்த மாதம் 10 ஆம் திகதி ஊர்வர இருந்தாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் சடலம் ஜித்தாவிலுள்ள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.