கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெடிகந்த வீதி – இரத்மலானை பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்ட தகாத விடுதியொன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
இதன்போது, அங்கு தகாத தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஏழு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -
கைதானவர்கள், கொட்டாவ, பொலன்னறுவை, நாரம்பனாவ, மித்தெனிய, இரத்மலானை மற்றும் பாணந்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் அனைவரும் 34 – 51 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும், பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் கைதான சந்தேகநபர்களை கல்கிசை நீதிவான் நீதிமன்றில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.