மஹரகம, நாவின்ன பிரதேசத்தை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த 5 நாட்களாக காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
- Advertisement -
கடந்த வெள்ளிக்கிழமை (07) முதல் குறித்த சிறுமி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
- Advertisement -
இன்றுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் சிறுமி எங்கிருக்கிறார் என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார். நேஹா கௌமதி ஹேரத் என்ற இந்த சிறுமி, 5’3” உயரமுடையவர். காணாமல் போன அன்று பச்சை நிற டி-சேர்ட் மற்றும் கருப்பு கால்சட்டை அணிந்திருந்ததாக கூறப்படுகிறது.
காணாமல் போன சிறுமி தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், 071 859 1645 / 0112 850222 / 0112 850 700 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொண்டு பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.