கொழும்பில் இன்று மாத்திரம் இதுவைரையில் மூன்று மனித சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இன்று முற்பகல் வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி கடற்கரையோரங்களில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டன. இந்த சடலங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
- Advertisement -
இந்நிலையில், தற்போது கொலன்னாவ பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு அருகில் உள்ள எண்ணெய் கால்வாயில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெமட்டகொட பொலிஸார் தெரிவித்தனர்.
- Advertisement -
எனினும், குறித்த சடலமும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என அவர்கள் கூறினர். இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெமட்டகொட பொலிஸார் எமது செய்தி சேவைக்கு மேலும் தெரிவித்தனர்.