கடந்த 2021 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கான பரிசோதகர்களை தெரிவு செய்வதற்கான இணையவழி மூலமான விண்ணப்பங்களை கோருவதற்கான நடவடிக்கை முன்னெடுத்திருப்பதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
- Advertisement -
மேலும், பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளமான doenets.lk யில் பிரவேசித்து அல்லது doe என்ற கையடக்க செயலியை பயன்படுத்தி விண்ணப்பிக்க முடியும் என தெரிவித்துள்ளது.
- Advertisement -
இதற்கு தேசிய அடையாள அட்டையின் இலக்கத்தை உபயோகிக்க முடியும் என பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் இறுதி தினம் ஜனவரி மாதம் 20-01-2022 ஆம் திகதி என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது,