தேனிலவு கொண்டாட இலங்கை வந்த வெளிநாட்டு தம்பதிகள் அனுமதியின்றி ஆளில்லா விமானத்தை இயக்கியதால் நீதிமன்றம் அவர்களுக்கு பராதம் விதித்துள்ளது.
- Advertisement -
குறித்த மபதிகள் இந்தியாவில் இருந்து வருகை தந்த நிலையில், வெலிகம கடற்பகுதியில் தம்மை படம்பிடிக்க அனுமதியின்றி ஆளில்லா விமானத்தை இயக்கியுள்ளனர்.
- Advertisement -
இந்நிலையில் தமது குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய தம்பதியருக்கு ரூ. 50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதம் நேற்று கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகலவால் விதிக்கப்பட்டது.
வர்த்தக துறையில் ஈடுபடுபவர்கள் என கூறப்படும் இந்த தம்பதியினர், தமது தேனிலவில் இலங்கைக்கு வந்திருந்த போது வெலிகம கடற்கரையில் ஆளில்லா விமானத்தை இயக்கி தங்களைப் பற்றிய படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளைப் படம்பிடித்தனர்.
இதனையடுத்து வெலிகம கடற்கரையில் அனுமதியின்றி ஆளில்லா விமானத்தை இயக்கிய குற்றச்சாட்டில் தம்பதியை வெலிகம பொலிஸார் கைது செய்திருந்தனர்.
மேலும் கைதான தம்பதிகளை சிவில் விமானப் போக்குவரத்துச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் அவர்களை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.