புலம்பெயர் தொழிலாளர்களினால் இலங்கைக்கு அனுப்பப்படும் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை 240 ரூபா வரை அதிகரிக்குமாறு யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த யோசனையை அமைச்சரவையில் முன்வைத்துள்ளார்.
- Advertisement -
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து பணம் தற்போது கிடைப்பதில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
கறுப்பு சந்தையில் 240 முதல் 245 வரையான பெறுமதியில் டொலர் மாற்றப்படுவதாகவும், வங்கிகளில் 203 ரூபாவிற்கே டொலர் மாற்றப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.
203 ரூபாவிற்கு டொலரை மாற்றுவதற்கு எந்தவொரு புலம்பெயர் தொழிலாளர்களும் விரும்புவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.