இலங்கையில் தடுப்பூசி அட்டைகளில் புதிய மாற்றமொன்று ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய, தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்குவதுடன் புதிய மென்பொருள் மற்றும் குறியீட்டு எண்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
- Advertisement -
இந்த பணி நிறைவடைந்ததும், முழுமையாக தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களுக்கு மாத்திரமே பொது இடங்களில் அனுமதி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
- Advertisement -
இந்த புதிய நடைமுறை இம்மாத இறுதிக்குள் நிறைவு செய்யப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.