அம்பாறை – திருக்கோவில் காவல் நிலையத்தில், துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை உத்தியோகத்தரின் வாக்குமூலம் தொடர்பில் முரணான தகவல்கள் வெளியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
தனது தாயாரைப் பார்ப்பதற்காக வீட்டுக்கு செல்வதற்காக விடுமுறை வழங்காததன் காரணமாகமே குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக, அந்த காவல்துறை உத்தியோகத்தர், விசாரணைகளின் போது தெரிவித்து வருகிறார்.
- Advertisement -
எனினும், அந்த காவல்துறை உத்தியோகத்தருக்கு இறுதியாக ஏழு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டிருந்ததாக விசாரணைகளை மேற்கொள்ளும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 24.12.2021 வெள்ளிக்கிழமை அம்பாறை திருக்கோவில் காவல் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நான்கு காவல்துறை உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளனர். இருவர் காயமடைந்தனர்.
இந்த நிலையில், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட காவல்துறை உத்தியோகத்தர் கைதுசெய்யப்பட்டிருந்தார். அதனையடுத்து காவல்துறையினர் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் போதே, உயரதிகாரி தனக்கு விடுமுறை தரமறுத்ததால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.
இருப்பினும் குறித்த காவல்துறை உத்தியோகத்தர் ஒவ்வொரு மாதமும் விடுமுறை பெற்றுள்ளதாகவும், விசாரணை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அவரின் வாக்குமூலம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.