சர்வதேசத்தில் தற்போது நிலவி வரும் நெருக்கடி நிலையில்,அரசு ,இறைமை என்பன வங்குரோத்து நிலையினை அடையும் போது ஓய்வூதிய நிதியம் பாரியளவில் பாதிக்கப்படும் என பிரித்தானியாவில் இருக்கக்கூடிய அரசியல் விமர்சகர் இதயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
ஆபத்தான நிலையில் உள்ள இலங்கையின் ஓய்வூதிய நிதியம் தொடர்பில் எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
- Advertisement -
இதன் காரணமாக ஓய்வூதியம் பெரும் மக்கள் பாரியளவில் பாதிக்கப்படுவார்கள்.ஓய்வூதிய பணத்தின் மதிப்பும் கணிசமாக வீழ்ச்சியடைந்து செல்லும் என்றும் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியாத நிலை ஏற்படும் போது வங்குரோத்து நிலை நேரடியாக ஏற்படும்.இதன் காரணமாகவே நாணயம் அச்சிடப்படுகின்றது. ஆகவே,இவ்வாறு பணம் அச்சிடப்படும் போது பணவீக்கம் அதிகரிக்கும்.
இவ்வாறு பணவீக்கம் அதிகரிக்கும் போது பணத்தின் மதிப்பும் குறையும்,பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.