மகளிர் விடுதி ஒன்றிற்குள் இரகசியமான முறையில் பிரவேசிப்பதற்கு முயற்சித்த நபர் ஒருவர் மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
- Advertisement -
மருதானை எஸ் மஹிந்த மாவத்தையில் அமைந்துள்ள நான்கு மாடி கட்டடமொன்றில் இயங்கி வரும் மகளிர் விடுதிக்குள் இரகசியமாக பிரவேசிக்க முயற்சித்த நபர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
- Advertisement -
உயிரிழந்தவர் ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதான நபர் என தெரிவிக்கப்படுகின்றது. இரகசியமாக விடுதிக்குள் பிரவேசிக்க முயற்சித்த போது பாதுகாப்பு உத்தியோகத்தர் கண்டதனால், அங்கிருந்த தப்பிக்க முயற்சித்த போது குறித்த நபர் கீழே வீழ்ந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடாத்தப்பட்டு வருவதாக மருதானை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.