யாழ்.குடாநாட்டில் தற்போது வேம்பு -பூவரசு விறகுக்கு திடீரென நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது. தெற்கிலிருந்து காட்டு விறகு வராமையினால் யாழிலுள்ள வேம்பு மற்றும் பூவரசு விறகுகளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டிருப்பதாக விறகு விற்பனை நிலைய உரிமையாளர்கள் தொிவித்துள்ளனர்.
- Advertisement -
அதோடு விறகு விலையும் சடுதியாக அதிகரித்திருக்கின்றது. ஒரு கிலோ 15 ரூபாயாக விற்கப்பட்ட விறகு தற்போது 20 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகின்றது.
- Advertisement -
நாடு ம் முழுவதும் எரிவாயு அடுப்புக்கள் வெடித்து வருவதாலும், சந்தையில் எரிவாயு சிலின்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாலும் மக்கள் மீண்டும் விறகு பாவனையை நாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.