இலங்கையில் 2021 (2022) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் கால அட்டவணையை கல்வி அமைச்சு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த ஆண்டு (2022) பெப்ரவரி 7ஆம் திகதி ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை மார்ச் மாதம் 4ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக சுமார் ஒரு வருட காலப்பகுதியில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்ததுடன், பரீட்சைகளும் தொடர்ச்சியாக பிற்போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -
இந்நிலையில் தற்போது பரீட்சைக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டு பரீட்சைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.