அரச சேவைப் பயிற்சியில் இணைந்த அனைத்து பட்டதாரிகளுக்கும் இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
- Advertisement -
அரச சேவை, மாகாண மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்தார். தற்போது வரையில் 50,000 க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் பொது சேவை பயிற்சியில் சேர்ந்துள்ளனர்.
- Advertisement -
பாடசாலைகளுக்கு ஒதுக்கப்பட்டவர்கள் தமது விருப்பத்திற்கேற்ப அதே பாடசாலையின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நிரந்தரமாக நியமிக்கப்பட முடியும் என அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.