பாகிஸ்தான், சியல்கோட்டில் இலங்கையரான பிரியந்த குமார எரித்து கொலை செய்யப்படும்போது அவரதுஉயிரைக் காப்பாற்ற முயன்ற பாகிஸ்தானியரான மாலிக் அத்னன், பிரதமர் இம்ரான் கானினால் ‘துணிச்சலுக்கான விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
- Advertisement -
அவரது மனிதாபிமான செயலானது முழு பாகிஸ்தானுக்கும் கௌரவத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் இம்ரான் கான் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கமைய, குறித்த நபரின் மனிதாபிமான செயலை பாராட்டி ‘ Tamgha-i-Shujaat’ என்ற அதியுயர் விருதினையும் வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.