கொழும்பு மாவட்டத்திலுள்ள பல பகுதிகளுக்கு 28 மணிநேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. நாளை(13) இரவு 8மணிமுதல் 14ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும்.
- Advertisement -
கொழும்பு 04, 05, 06, 07, 08, புறக்கோட்டை மற்றும் கடுவலை மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளிலும் மேலும் மகரகம, பொரலஸ்கமுக நகரசபைக்குட்பட்ட பகுதிகளிலும் நீர் விநியோக தடை ஏற்படும் என நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.