சப்புகஸ்கந்த பகுதியிலிருந்து அண்மையில் பயணப்பையில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லம்பட்டிய பகுதியிலுள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
- Advertisement -
சம்பவம் தொடர்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களான கணவன், மனைவியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து குறித்த பிரதான சந்தேகநபர் தொடர்பான தகவல் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
- Advertisement -
இதேவேளை பிரதான சந்தேகநபரிடமிருந்து, படுகொலை செய்யப்பட்ட பெண் அணிந்திருந்த தங்க ஆபரணங்கள், கொலை செய்ய பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் உலக்கை, சடலத்தை எடுத்து செல்ல பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வாகனம் என்பவற்றை மீட்டுள்ளதாக சப்புகஸ்கந்த பொலிஸாரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.