நாடளாவிய ரீதியில் பல இடங்களில் தற்போது சீரற்ற காலநிலை நிலவி வருகிறது.இந்த நிலையில் பல இடங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன. இதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பகுதிகள் தற்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
- Advertisement -
யாழ். மாவட்டத்திற்குட்பட்ட சங்கானை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதால் இதுவரை அராலியில் மட்டும் 70 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சங்கானை பிரதேச செயலர் பிரேமினி தெரிவித்துள்ளார்.