பி.சி.ஆர் இயந்திரத்தில் சோதனை நடாத்துவதற்கு பயன்படுத்தப்படும் சாதனங்களை கொள்வனவு செய்வதில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சாதனங்களை கொள்வனவு செய்வதில் சுமார் 125 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
- Advertisement -
2020ம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த சாதனங்களை கொள்வனவு செய்தவற்காக விலை மனுக்களை கோரிய போது கூடுதல் விலையை நிர்ணயம் செய்திருந்த நிறுவனமொன்றிடம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிடம்(Mahinda Yapa Abeywardena), கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பீ.சீ. விக்ரமரட்ன அண்மையில் ஒப்படைத்துள்ளார்.
- Advertisement -
விலை மனுக் கோரலின் போது குறைந்த விலையை நிர்ணயம் செய்து மனு கோரியிருந்த நிறுவனத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சில நிறுவனங்களுக்கு நலன்களை வழங்கும் நோக்கில் இவ்வாறு செயற்பட்டுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரச மருந்தக கூட்டுத்தாபனத்தினால் இவ்வாறு கூடுதல் விலைக்கு பி.சி.ஆர். இயந்திரத்திற்கு பயன்படுத்தப்படும் பரிசோதனை சாதனங்கள் கொள்வனவு செய்பய்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.