சப்புகஸ்கந்த பகுதியில் மாளிகாவத்தையை சேர்ந்த 42 வயதான பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 42 வயதான குறித்த பெண், சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் பயணப் பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
- Advertisement -
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கணவன், மனைவி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சடலத்தை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் லொறியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.