மட்டு. கல்குடா பொலிஸ் பிரிவில் ஆயுள்வேத மசாஜ் நிலையத்தின் பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று முற்றுகையிடப்பட்ட நிலையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்ஹே வழிகாட்டலில் மட்டக்களப்பு குற்ற விசாரணை பிரிவினர் மற்றும் கல்குடா பொலிஸார் இணைந்து ஆயுள்வேத மசாஜ் நிலையத்தினை முற்றுகையிட்ட னர்.
- Advertisement -
இதன் போது அங்கிருந்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைதானவர்கள் அவிசாவல மற்றும் பொலனறுவை பகுதியினைச் சேர்ந்த 21, 33, 38 வயதுடைய பெண்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.
- Advertisement -
இதனையடுத்து அவர்களை வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதவான் எச்.எம்.எம்.பஸீல் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது எதிர்வரும் 19ம் திகதி வரை சமூகநோய் தொடர்பான அறிக்கை பெறுவதற்காக தடுத்து வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.