திருமணத்திற்கு மறுநாள் காலையில் தனது மனைவியை மேக்கப் இல்லாமல் பார்த்து அதிர்ச்சியடைந்த கணவன் ஒருவர் , விவாகரத்து கோரி குடும்ப நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ள சம்பவம் ஒன்று எகிப்தில் நடந்துள்ளது.
- Advertisement -
இந்த ஜோடி பேஸ்புக் மூலம் காதலில் வீழ்ந்தாக கூறப்படுகின்றது. இந்நிலையில் திருமணத்திற்கு மறுநாள் காலையில் தனது மனைவியின் முகத்தை ஒப்பனை இல்லாமல் பார்த்து அதிர்ச்சியடைந்ததாக அந்த நபர் கூறினார். “திருமணத்திற்கு முன்பு கனமான மேக்கப் போட்டதால் நான் அவளால் ஏமாற்றப்பட்டதாக கூறும் அந்நபர், அவள் மேக்கப் இல்லாமல் அசிங்கமாக இருக்கிறாள், என்றும் அவர் நீதிமன்றத்தில் கூறினார்.
- Advertisement -
தனது மனைவி குறித்து அவர் கூறுகையில், பேஸ்புக் மூலம் அவளை எனக்குத் தெரியும், அங்கு அவள் முழு மேக்கப் அணிந்து நிறைய அழகான படங்களை பதிவிடுவாள். அதன் பின்னர் அவளை பலமுறை சந்தித்த பின்பே அவளை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன்.
ஆனால் திருமணத்திற்குப் பிறகு நான் அவளுடைய உண்மையான முகத்தை ஒப்பனை இல்லாமல் பார்த்தேன் என அவர் பீதியுடன் கூறினாராம். அதோடு திருமணத்திற்கு முன்பு நான் பலமுறை சந்தித்த நபரைப் போல் அவள் தோற்றமளிக்கவில்லை” என்று அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் அவள் மேக்கப் போடாதபோது முற்றிலும் வித்தியாசமாகத் தெரிகிறாள். நான் ஏமாற்றப்பட்டேன், அவளை விவாகரத்து செய்ய விரும்புகிறேன்’ எனவும் கணவர் நீதிமன்றில் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது