கொழும்பின் புறநகரான சப்புகஸ்கந்த பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அருகில் உள்ள வீதியில் உள்ள குப்பையில் இருந்த பயணப்பையொன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
- Advertisement -
இத்தகவலை மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் இன்று கைது செய்யப்படலாமெனவும் அவர் குறிப்பிட்டார்.
- Advertisement -
பெண் உயிரிழந்த தொடர்பில் நான்கு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் சப்புகஸ்கந்த பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதோடு குறித்த பெண் அணிந்திருந்த சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளும் காணாமல் போயுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்த பெண் மாளிகாவத்தையை வசிப்பிடமாகக் கொண்டிருந்தவர் என நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளார். ராகம போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் அவரது கணவரும் இரண்டு பிள்ளைகளும் சடலத்தை பார்வையிட்டதன் பின்னர் அவர்கள் சடலத்ட்க்ஹை அடையாளப்படுத்தியிருந்தனர்.