2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சிகரட் விலை தொடர்பில் விலைச்சூத்திரம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இவ்வாறு விலைச் சூத்திரம் அறிமுகம் செய்யப்பட்டால் சிகரட்டின் விலை 4 அல்லது 5 ரூபாவினால் உயர்த்தப்படும் என புகையிலை மற்றும் அல்ஹகோல் தொடர்பான தேசிய அதிகாரசபை தெரிவித்துள்ளது.
- Advertisement -
சிகரட் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் விலைச் சூத்திரம் உருவாக்கப்படுவதாகத் அதிகாரசபையின் தலைவர் டொக்டர் சமாதி ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்த விலைச் சூத்திரம் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
- Advertisement -
வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் சிகரட்டின் விலை 4 முதல் 5 ரூபாவினால் உயர்த்தப்படும் எனவும் ஐந்து ஆண்டுகளில் 20 ரூபாவினால் உயர்த்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புகைப்பிடிப்பதன் காரணமாக நாள் ஒன்றுக்கு இலங்கையில் 60 பேர் உயிரிழப்பதாகவும் ஆண்டொன்றில் 22,000 பேர் உயிரிழப்பதாகவும் தெரிவித்துள்ளார்.