சமகால அரசாங்கத்தின் மற்றுமொரு சிரேஷ்ட அமைச்சர் பதவி இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது அமைச்சின் செயலாளருடன் கடமை செய்ய முடியவில்லை என்ற காரணத்தினால் அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
- Advertisement -
இது தொடர்பில் பல முறை அரசாங்கத்தின் பிரதானிகளிடம் குறித்த அமைச்சர் தெரிவித்த போதிலும், அதற்கான உரிய பதில் இதுவரையில் கிடைக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது. ஜனாதிபதி நாட்டிற்கு வருகைத்தந்ததன் பின்னர் தான் இராஜினாமா செய்வதனை அறிவிக்க இந்த சிரேஷ்ட அமைச்சர் தயாராகியுள்ளார் என தெரியவந்துள்ளது.
- Advertisement -
இதுவரையில் இன்னுமொரு அமைச்சரும் தனது பதவியை இராஜினாமா செய்வதற்காக கடிதத்தை தயார் செய்துள்ளதாகவும் ஜனாதிபதி நாடு திரும்பும் வரை பார்த்துக்கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.