நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள போதிலும் அதனை தவறான பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்தன கேட்டுக்கொண்டுள்ளார். பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளதனை பயன்படுத்தி சுற்றுலா பயணங்கள் மற்றும் அத்தியாவசியமற்ற பயணங்கள் செல்வதனை தவிர்க்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -
மக்கள் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டால், மீண்டும் கோவிட் தொற்று பரவினால் மீண்டும் முடக்க நிலைக்கு செல்ல நேரிடும். இதனால் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
- Advertisement -
தடுப்பூசி செலுத்திய போதிலும் கோவிட் தொற்று பரவக்கூடும் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களால் மற்றுமொருக்கு பரவும். முகக் கவசமின்றி பயணிப்பதனை தவிர்த்துக் கொள்ளுங்கள். அவதானமாக செயற்படுங்கள் என நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.