தேர்வில் தோல்வியடைந்துவிட்டதாக தவறுதலாக அனுப்பப்பட்ட மின்னஞ்சல் தகவலால் மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- Advertisement -
பிரித்தானியாவில் சவுத் வேல்ஸில் உள்ள கார்டிப் பல்கலைக்கழகத்தில் (Cardiff University) 2-ம் ஆண்டு மருத்துவக்கல்வி பயின்று வந்த 21 வயதான மாணவி மாரெட் ப்லூகஸ். இவர் 3-ம் ஆண்டு செல்வதற்கான தேர்வை எழுதியுள்ளார். அதில், 39 சதவிகிதம் எடுத்து தோல்வியடைந்துள்ளார். அதனை தொடர்ந்து மறுதேர்வு எழுதியுள்ளார்.
- Advertisement -
அந்த தேர்வுக்கான முடிவு மின்னஞ்சல் (Mail) மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், மாரெட் ப்லூகஸ் மறுதேர்விலும் தோல்வியடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மறுதேர்வில் மாரெட் 62 சதவிகிதம் எடுத்து தேர்ச்சியடைந்து இருந்தார்.
கார்டிப் பல்கலைக்கழகத்தின் மின்னஞ்சல் (Mail) மூலம் அனுப்பப்பட்ட தேர்வு முடிவு தவறானது என்பதை அறியாத மாணவி மாரெட் ப்லூகஸ் மிகுந்த கவலையில் இருந்துள்ளார். மன உளைச்சல் அதிகரித்த நிலையில், பிரிட்டானியா மேம்பாலத்தில் ( Britannia Bridge) இருந்து ஆற்றில் குதித்து மாணவி மாரெட் ப்லூகஸ் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.