க.பொ.த உயர்தரம் மற்றும் சாதாரணதர மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதற்காக சுகாதார பரிந்துரைகளும் வழங்கப்பட்டுள்ளது. கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக, பாடசாலை மாணவர்களின் கல்வி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
இந்த நிலையில் அது தொடர்பில் அவதானம் செலுத்தி, கல்விப் பொதுத் தராதர சாதாரணதரம் மற்றும் உயர்தரங்களுக்கான பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க சுகாதாரப் பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
- Advertisement -
இது தொடர்பில், பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தி, கல்வி நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு, ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். இன்று இடம்பெற்ற கொவிட் தடுப்பு செயலணிக் கூட்டத்தின் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பல்கலைக்கழக முதலாமாண்டு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் விரைவில் ஆராயுமாறும், சுகாதார மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு ஜனாதிபதி இதன்போது அறிவுறுத்தியுள்ளார்.