மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை எதிர்வரும் திங்கட்கிழமை தளர்த்தப்பட்டதன் பின்னர், உரிய நேர அட்டவணைக்கு அமைய சகல பேருந்து சேவைகளும் தடையின்றி முன்னெடுக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum amunugama) தெரிவித்துள்ளார்.
- Advertisement -
தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்துடன், போக்குவரத்து அமைச்சில் நேற்று(28) இடம்பெற்ற கலந்துரையாடலில், இந்த விடயம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதேநேரம், கொவிட்-19 பரவல் காரணமாகத் தடைப்பட்டிருந்த தனியார் பேருந்து சேவைகளை மீள ஆரம்பிப்பதற்காக,
- Advertisement -
பேருந்து உரிமையாளர்களுக்கு வழங்கக்கூடிய, அனைத்து நிவாரணங்களையும் வழங்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி (Pavithra Wanniarachchi) இந்த ஆலோசனையை வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.