நாட்டில் அமுல்படுத்தப்பட்ட சுகாதார சட்டங்களை தளர்த்திய பின்னர் மக்களின் செயற்பாடு தொடர்பில் வருத்தமளிப்பதாக சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன (Asela Gunawardena) தெரிவித்துள்ளார். சுகாதார சட்டத்திட்டத்தை தொடர்ந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு மக்களின் கேட்டுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -
கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் போது, சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படாத நிலை காணப்படுவதாகவும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், சுகாதார நடைமுறைகளை எப்பொழுதும் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். முகக் கவசம் அணியும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும், மக்கள் ஒன்றுக்கூடுவதனை முடிந்தளவு குறைத்துக் கொள்ள வேண்டும். இலங்கையில் தினசரி 500 தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
- Advertisement -
சுகாதார வழிக்காட்டல்களை பிற்பற்றவில்லை என்றால் மீண்டும் கட்டுப்பாடுகளுக்கு அப்பால் செல்ல நேரிடும். அனைவரும் சுற்றுலா பயணம் செல்ல விரும்பினாலும், இன்னும் இரண்டு மாதங்களில் பொறுமையாகவும் பாதுகாப்பாகவும் இருந்தால் பெரும் வெற்றியை அடைய முடியும். ஊரடங்குச் சட்டம் இல்லாத காரணத்தால் மக்களை பின் தொடர்ந்து அதிகாரிகள் செல்ல முடியாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.