தேர்தலில் களமிறங்கும் அரசியல் தலைவர் ஒருவர் எடுக்காத வகையிலான தீர்மானத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்துள்ளார் என கமத்தொழிற்துறை ராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார். நெற் பயிர்ச் செய்கைக்காக பதுளை மாவட்டத்தில் முதல் முறையாக சேதனப் பசளைகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
- Advertisement -
உழவன் என்பவன் சேற்றை கழுவிய பின்னர் அரச பதவிக்கும் பொருத்தமானவன் என கேள்விபட்டிருந்தாலும் அண்மை கால வரலாற்றில் உழவர்கள் அரசனாகா விட்டாலும் கடனாளிகள் பலர் உள்ளனர். அத்துடன் விஷ போத்தலை கையில் வைத்துக்கொண்டு தொலைக்காட்சிகளில் சேதனப் பசளையில் பயிர் செய்ய முடியாது எனக் கூறி ஊர்வலம் செல்கின்றனர்.
- Advertisement -
ஆர்ப்பாட்டம் நடத்தும் பலர் யார் என்பது குற்றப் புலனாய்வு பொலிஸார் மூலம் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்கள் மத்தியில் கமத்தொழிலுடன் தொடர்பில்லாத பலர் இருக்கின்றனர். ஏனையோர் சேதனப் பசளை பயிர் செய்கை பற்றி அணுளவும் அறியாதவர்கள்.
அதேவேளை தேர்தலில் களமிறங்கும் அரசியல் தலைவர் ஒருவர் எடுக்காத வகையிலான தீர்மானத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்துள்ளார். மக்கள் விஷத்தை உண்டு இறந்தாலும் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செயற்பட மாட்டார்.
இதன் காரணமாக நாளைய தினம் தேர்தல் நடத்தினால் தோல்வியடைவோம் எனவும் சஷீந்திர ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, உடனடியாக தேர்தல் ஒன்றை நடத்தினால், அரசாங்கம் தோல்வியடையும் எனவும் கமத்தொழிற்துறை ராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார்.