முகநூலூடாக அறிமுகமாக காதலனுடன் வாழச்சென்று, 16 நாட்களின் பின்னர் திருகோணமலை கந்தளாய் முள்ளிப்பொத்தானை பகுதியை சேர்ந்த துஷானி பிரியங்கா (23) என்ற யுவதி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் , யுவதியின் தந்தை சந்தேகம் வெளியிட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- Advertisement -
குறித்த யுவதி கடந்த 3ஆம் திகதி வீட்டிலிருந்து வெளியேறி, காதலனின் வீட்டிற்கு சென்றார். கடந்த 19ஆம் திகதி காதலன் முச்சக்கர வண்டி வாடகைப் பயணத்திற்கு சென்ற பின்னர், யுவதி வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில் முள்ளிப்பொத்தானை, சதாம் நகரில் வசிக்கும் யுவதியின் தந்தை, மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளார்.
- Advertisement -
“எனது மகள் கடந்த 3 ஆம் திகதி பலாங்கொடைக்கு செல்லப் போவதாக கூறினார். ஒருவரை காதலிப்பதாகவும், அவர் என்னை நன்றாக பார்த்துக்கொள்வார் என தெரிவித்ததுடன் தன்னை மன்னிக்கும்படி கேட்டு, “நீங்கள் மகிழ்ச்சியாக இருங்கள்“ என கூறிவிட்டு மகள் சென்றதாக தந்தை கூறியுள்ளார்.
அதோடு மகள் பலாங்கொடை சென்ற பின்னர் அடிக்கடி தொலைபேசியில் அழைத்ததால் நாங்கள் போலீசில் புகார் அளிக்கவில்லை என்றும், ஒரு நாளைக்கு இரண்டு முறை பேசியதாகவும் கூறினார்.
அதன்பின்னர் 19 ஆம் திகதி காலையில் மகளிடம் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா என்று கேட்டபோது அவர் ஆம் என்று கூறியதுடன், இப்போது இதை சொல்ல முடியாது என கூறியதாக தெரிவித்த தந்தை, அதுதான் மகளின் கடைசி அழைப்பு என்றும், அவரின் மரணத்தில் எங்களுக்கு தெளிவான சந்தேகம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதேவேளை யுவதியின் காதலனின் தாயார் பி.கே. சுனிதா (43) பொலிஸாரிடம் கூறுகையில், நான் அருகிலுள்ள வீட்டில் ஒரு பிறந்தநாள் நிகழ்விற்காக உணவு தயாரிக்க சென்று இரவு 8.30 மணியளவில் வீட்டிற்கு வந்தேன். இதன்போது துஷானி இருந்த அறையின் கதவு மூடப்பட்டது.
நான் கூப்பிட்டபோது பதில் இல்லை. அதன்பின்னர் இளைய மகனை கூப்பிட்டு, ஒரு மேஜையில் ஏறி அறையில் பார்க்கச் சொன்னேன். அறையினுள் தூக்கில் தொங்கியபடி துஷானி காணப்பட்டார்.
இதனையடுத்து உடனடியாக அறைக்குள் நுழைந்து கழுத்தில் இருந்த பெட்ஷீட்டை வெட்டி அவரை காப்பாற்ற முயற்சித்தேன் என்கிறார். சம்பவம் நடந்த வீட்டை பலாங்கொட பொலிஸ் அதிகாரிகள் சோதனையிட்ட போது, யுவதியின் கழுத்தில் கட்டப்பட்ட துணி துண்டிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் உயிரிழந்த யுவதியின் காதலன் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில், “நானும் அவரும் முகநூலில் அறிமுகமாகி சுமார் 9,10 மாதங்களாக தொடர்ந்து , நெருங்கிப் பழகி, காதலர்களானோம். அதன்பின்னர் அவரை சந்திக்க கந்தளாய் சென்று ஹொட்டல் அறையொன்றில் தங்கியிருந்த பின், அவரையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தேன். எனினும் எங்கள் குடும்பத்தினர் இந்த உறவை விரும்பவில்லை.
அவர்கள் சிறிய விஷயங்களுக்காக சண்டையிட்டனர். ஆனாலும் விரைவாக அனைவரும் நன்றாக பழக ஆரம்பித் நிலையில் நாங்கள் நன்றாக இருந்தோம். இவ்வாறான நிலையில் அவர் ஏன் இந்த முடிவெடுத்தார் என்பது தெரியவில்லை என கூறியுள்ளார்.
இந்த நிலையில் யுவதி உயிரிழந்த காரணம் இதுவரை தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பில் பலாங்கொட பொலிசார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.