கொரோனா தொற்றினால் அண்மையில் உயிரிழந்த மருத்துவர் ஏலியந்த வைட்டின் மகள் மற்றும் மகனுக்கான பாதுகாப்புக்காக 21 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தகவலை கொழும்பில் நடந்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி நிரோஷன் பாதுக்க தெரிவித்தார்.
- Advertisement -
அதன்படி பொலிஸ் மகளிர் பிரிவிலிருந்து 04 உத்தியோகத்தர்கள் உட்பட 21 அதிகாரிகள் இவ்வாறு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும், அதற்காக அவர்கள் மிரிஹானை பொலிஸ் நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
- Advertisement -
எனினும் என்ன காரணத்திற்காக இவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை என்றும் அவர் கூறினார். இதேவேளை உயிரிழந்த மருத்துவர் ஏலியந்த வைட் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட மருத்துவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.