பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தங்கையும் முன்னாள் அமைச்சருமான நிருபமா ராஜபக்ஷவின் கணவரது இரகசிய சொத்துக்கள் தொடர்பிலான இரகசிய ஆவணம் கசிந்துள்ளதை அடுத்து அரச உயர்மட்டத்தின் கவனமும் அதன் மீது திரும்பியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இந்த வாரத்தில் குறித்த விவகாரம் தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை ஒன்று பிரதமர் தலைமையில் நடக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- Advertisement -
இதேவேளை விசேடமாக ஒவ்வொரு வாரமும் ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் உள்ளிட்டோர் கொழும்பில் கூடி பேச்சு நடத்துவது வழக்கம். இந்நிலையில் அந்த பேச்சுவார்த்தையில் மேற்படி விடயமும் ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகிறதாக கூறப்படுகின்றது.
- Advertisement -
இதேவேளை உலக நாடுகளை உலுக்கிய பெனடோரா பேப்பர்ஸ் வெளியிட்ட அந்தரங்க சொத்துக்களை வைத்திருப்போரின் பட்டியலில் நிரூபமா ராஜபக்ஷவின் கணவர் திருக்குமார் நடேசனின் பெயரும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.